Disqus Shortname

உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் திமுக எம்.எல்.ஏ நன்றி தெரிவித்தார்

உத்திரமேரூர் ஜீன், 12

தமிழகத்தில் அண்மையில் நடைப்பெற்ற 2016 சட்ட மன்ற தேர்தலில் உத்திரமேரூர்
தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர்
க.சுந்தர் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் விதமாக
தொகுதியில் உள்ள கிராமங்களில் தொடர்ந்து நன்றி தெரிவித்து வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக நேற்று உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட
காவாம்பயிர், ஆதவப்பாக்கம், வெங்கச்சேரி, மணல்மேடு, புலிவாய்,
கருவேப்பம்பூண்டி, ஒழையூர், அழிசூர், மருதம், திருப்புலிவனம்ஆண்டித்தாங்கல், களியாம்பூண்டி, பெருநகர், விசூர், மானாம்பதி, கண்டிகை
உள்ளிட்ட கிராமங்களில் வீதி வீதியாக சென்று வாக்களித்த மக்களுக்கு நன்றி
தெரிவித்தார். கிராமங்களில் தொண்டர்களும் கிராம மக்களும் சட்ட மன்ற
உறுபினர் க.சுந்தருக்கு சால்வைகள், மாலைகள் அணிவித்தும், பட்டாசு
வெடித்தும் உற்சாக வரவேற்பளித்தனர். நிகழ்ச்சியின் போது உத்திரமேரூர்
ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், நகரச் செயலாளர் பாரிவள்ளல், தலைமை செயற்குழு
உறுப்பினர் நாகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மா.ஏழுமலை, மாவட்ட
இலக்கிய அணி துணை அமைப்பாளர் டி.கே.கோபாலகிருஷ்ணன், சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் சுப்பைய்யா மாவட்ட
பிரதிநிதி வெ.கோவிந்தராஜ்,  உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments