Disqus Shortname

மர்மமான முறையில் வீடு வெடித்து தாய் மற்றும் மகன் பலி

காஞ்சிபுரம் .ஜீன்.02

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ரவி 35 விவசாயி, இவரது மனைவி ஜெயா 33, இவர்களுக்கு தீனதயாளன் 5, திவாகர் 4, என்று 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் வீடு அருகில் இவரது அண்ணன் மோகன் 37 வசித்து வருகிறார். நேற்று ரவி தனது செந்த வேலை காரணமாக வெளியில் சென்றுவிட்டார். வீட்டில் ஜெயாவும் அவரது மகன் தீனதயாளனும் மட்டும் இருந்தனர்.  2வது மகன் திவாகர் உறவினர் வீட்டில் விலையாடிக்கொண்டிருந்தான். அப்போது
திடீரென பலத்த சத்தத்துடன் ரவியின் தளம் போட்ட வீடு இடிந்து விழுந்து தரை மட்டம் ஆனது. பதரி போன அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்ததில் ஜெயாவும், அருகில் உள்ள வீட்டிலிருந்து மோகனும் பலத்த காயமடைந்து இருந்தனர். உடனே அவர்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனையில் ஜெயாயும் மகன் தீனதயாளனும்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இடிபாடுகளில் மேலும் யாராவது சிக்கி உள்ளனரா என தேடுதல் பணியில் தீயனைப்பு படையினர் தீயனைப்பு வாகனம் மற்றும் ஜசிபி வாகனம் மூலம் தேடுகின்றனர், எவ்வாறு வெடித்தது என காரணத்தை பல்வேறு கோணங்களில் உத்திரமேரூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments