Disqus Shortname

கிணற்றில் தவறி விழுந்த பெண் பலி

காஞ்சிபுரம் ஜீன்.17
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மருதம் கிராமத்தை சேர்ந்தவர் வீரராகவர் இவரது மனைவி குமுதா 32 இவர் நேற்று முன்தினம் மாலை விவசாயின் கிணற்றுக்கு துணி துவைப்பதற்காக சென்றார். அப்போது கிணற்றில் படி தவறி கிணற்றினுள் விழுந்து விட்டார் அலறல் சத்தம் கேட்ட பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து குமுதாவை மீட்டு உத்தரமேரூர் அரசு மருத்துவமனை எடுத்து சென்றனர் அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் இறந்துவிட்டதாக கூறினார். பின்னர் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார், தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்

No comments