Disqus Shortname

அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் வெள்ளி விழா ஆண்டில் சந்திப்பு

உத்திரமேரூர்மே 30-

காஞ்சிபுரம்மாவட்டம்உத்திரமேரூர்அரசினர்ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1990-91ம் ஆண்டு பயின்ற மாணவர்கள்வெள்ளிவிழா கொண்டாடும் விதமாக பள்ளி வளாகத்தில் சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்ததுஇவர்கள் தற்போது பலர்அரசுதுறைநீதித்துறைதொழிலதிபர்தாசில்தார் என பல்வேறு பொறுப்புகளில் உள்ளனர்இந்த நிகழ்ச்சிக்கு தீயணைப்பு துறைஊழியர் பாலாஜி தலைமை வகித்தார்டாக்டர் சசிகலா முன்னிலை வகித்தார்நீதிபதி விஜயா வரவேற்றார்சிறப்புஅழைப்பாளர்களாக பங்கேற்ற ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் ரகுபதிமுன்னாள் ஆசிரியர்கள் திருஞானசம்பந்தம்,கிருஷ்ணன்சண்முகசுந்தரம் ஆகியோருக்குமுன்னாள் மாணவர்கள் சிறப்பு பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்நிகழ்ச்சியின் போது தாங்கள் பள்ளியில் பயின்ற நிகழ்வுகளை பகிர்ந்துக் கொண்டனர். மேலும் அரசு பள்ளியில் தமிழ்வழி கல்வியில் பயின்று இந்த நிலையை நாங்கள் அடைந்தமைக்கு பெறுமிதம் கொள்வதாக தெரிவித்தனர். மேலும் பள்ளியின் வளர்ச்சிக்கான கனிசமான ஒரு தொகையினை வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். நிகழ்ச்சியின் போது பள்ளி மாணவர்கள் தாங்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்ப்பாடுகளை கார்த்திகேயன், இராஜேந்திரன் மற்றும் முன்னாள் மாணவர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். முடிவில் பாஸ்கர் நன்றி கூறினார். 

No comments