Disqus Shortname

உத்திரமேரூரில் சூராவளி காற்று கம்பங்கள் மரங்கள் சாய்தது போக்குவரத்து பாதிப்பு

உத்திரமேரூர் ஜீன், 17

உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இடி மின்னலுடன் பலத்த சூராவளி காற்று வீசியது. இந்த சூராவளிக் காற்றினால் உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் நேற்று இரவு சுமார் 4 மணி நேரம் மின்சாரம்  துண்டிக்கப்பட்டது. மேலும் உத்திரமேரூர் அடுத்த அழிசூர் கிராமத்தில்  விவசாய நிலங்களுக்கு செல்லும் அடுத்தடுத்த 5 மின் கம்பங்கள் உடைந்து வயல்  வெளிகளில் விழுந்தது. கம்பங்கள் சாய்துள்ளதால் விவசாயிகள் மின்சாரம் மட்டுமின்றி அழிசூர். ஒழுகரை, சிலாம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் இரவு  முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு கிராமங்கள் இருளில் மூழ்கின. மேலும் அழிசூரிலிருந்து மேல்பாக்கம் செல்லும் சாலையில் மரங்கள் சாய்தது  இதனால் இவ்விரு கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது  குறித்து விவசாயிகள் கூறியதாவது ஏற்கனவே பழுதடைந்த மின்கம்பங்கள்  மாற்றித்தரக் கோரி மின்வாரியத்திற்கு பல முறை புகார் கொடுத்துள்ளோம்  ஆனால் அவர்கள் அதற்கான எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று வீசிய பலத்த காற்றுக்கு பழுதான மின் கம்பங்கள்  உடைந்து இது போன்ற பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. எனவே இந்த பழுதான  மின்கம்பத்தை அகற்றிவிட்டு வேறு கம்பங்களை மாற்றி தர பொது மக்கள்  கோரிக்கை விடுத்துளளனர்.

No comments