Disqus Shortname

உத்திரமேரூரில் திமுக சார்பில் முப்பெரும் விழா பொது கூட்டம்

உத்திரமேரூர் ஜீன், 21

உத்திரமேரூர் ஒன்றிய மற்றும் பேரூர் திமுக சார்பில் முப்பெரும் விழா பொது கூட்டம் உத்திரமேரூர் பேரூந்து நிலையத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார்.நகர செயலாளர் பாரிவள்ளல், தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் டி.கே.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்ட மன்ற உறுப்பினருமான க.சுந்தர், தலைமை கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் திமுகவின் சாதனைகள் பற்றியும், அதிமுகவின் அவலங்கள் குறித்தும் விளக்கி கூறப்பட்டது. எம்.எல்.ஏ க.சுந்தர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் செய்யூர்  எம்.எல்.ஏ அரசு, சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் சுப்பைய்யா மாவட்ட பிரதிநிதி வெ.கோவிந்தராஜ், தொ.மு.ச  து.சுந்தர், ஒன்றிய பிரதி நிதி கார்த்திகேயன் உட்பட நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய துணை செயலாளர் எஸ்.ருத்தகோட்டி நன்றி கூறினார்.

No comments