Disqus Shortname

மீனாட்சி அம்மாள் குளோபல் உயர்நிலைப்பள்ளி சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம் ஜீன், 13
    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மீனாட்சி அம்மாள் குளோபல் உயர்நிலைப்பள்ளி சார்பில் உத்திரமேரூரில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரணியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்திபாலாஜி தலைமை தாங்கினார். மீனாட்சி மருத்துவமனை மருத்துவ அலுவலர் சுப்பரமணியன் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியானது பேரூராட்சி அலுவலக வளாகத்தில் துவங்கி பெரிய நாராசம் பேட்டை தெரு, திருமலையா பிள்ளைத் தெரு, பஜார் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று தாலுக்கா அலுவலகம் அருகில் முடித்தனர். இப்பேரணியின் போது புகையிலையினால் ஏற்படும் தீமைகள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறும், கோஷங்கள் ஏழுப்பியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர். பேரணியில் மீனாட்சி அம்மாள் குளோபல் பள்ளி மாணவ-மாணவியர்கள் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர்

No comments