Disqus Shortname

உத்தரமேரூரில் அடுத்தடுத்து இரண்டு நாட்களில் 4 கோவில்கள் திருட்டு

உத்தரமேரூர்  ஜீன், 09
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் சின்ன நாராசம் பேட்டை தெருவில் உள்ள பழமை வாய்ந்த கோவில் ஆலடி சித்தி வினாயகர் கோவில் இந்த கோவிலில் மணி என்ற பூசாரி தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் சாமிக்கு பூஜை செய்வது வழக்கம் இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் பூஜை முடித்த பின் கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார் நேற்று காலை கோவிலை திறக்க வந்த பூசாரி வெளி கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு உண்டியலில் இருந்த சுமார் 5000 ரூபாய் பணம் திருடு போய் இருப்பது தெரியவந்தது. இதேப்போல் இதன் அருகில் கருணீகர் தெருவில் உள்ள அய்யனார் கோவில், பட்டஞ்சேரி கிராமத்திலுள்ள கங்கையம்மன் கோவிலிலும் குப்பைநல்லூரில் உள்ள வினாயகர் கோவில் உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் திருடு போய் இருப்பது தெரியவந்துள்ளது.  இதையடுத்து உத்தரமேரூர் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது.  மேலும் இதே சின்னநாராசம் பேட்டை தெருவில் கடந்த வாரம் இருசக்கர வாகனத்தில் வந்த வியாபாரியிடம் 1,70 லட்சம் ரூபாய் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

No comments