அரசு கல்லூரிக்கு மாணவர்களுக்கான இருக்கைகள் வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கினார்
காஞ்சிபுரம்
மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா திருப்புலிவனத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல்
கல்லூரியில் 2015-16 ஆம் ஆண்டு சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு
நிதியிலிருந்து ரூ 10 லட்சம் மதிப்பில் மாணவ –மாணவியர்களுகான இருக்கைகளை முன்னாள் உத்தரமேரூர்
சட்ட மன்ற உறுப்பினரும், அதிமுக காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளருமான வாலாஜாபாத் பா.கணேசன்
வழங்கினார். நிகழ்ச்சியில் காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர் மரகதம்குமரவேல். ஒன்றிய செயலாளர்கள்
பிரகாஷ்பாபு, அண்ணாமலை, ஒன்றியகுழுத்தலைவர் கமலகண்ணன், துணைத்தலைவர் ரவிசங்கர் உட்பட
கல்லூரி பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்
No comments