கருவேப்பம்பூண்டியில் 162 மாணவ மாணவியர்களுக்கு சீருடை ஸ்ரீ கீர்த்திமதி அன்னை வழங்கினார்.
உத்திரமேரூர் ஜீலை 08
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா கருவேப்பம்பூண்டி
சக்தி பீடத்தில் அருள்வாக்கு அன்னை ஸ்ரீ கீர்த்திமதி அன்னையின் 58-ம் ஆண்டு அவதார திருநாள்
விழா நேற்று நடைப்பெற்றது. முன்னதாக அன்னைக்கு வேள்வி பூஜை, அபிஷேக அலங்காரம் முடிந்தபின்
பாதபூஜை நடத்தப்பட்டது. அதன்பின் கருவேப்பம்பூண்டி
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயலும் 162 மாணவ, மாணவியருக்கு சீருடைகளும், ஏழை
மக்களுக்கு இலவச வேட்டி சேலைகளையும் கீர்த்திமதி அன்னை வழங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர்
த,தனசேகரன் முன்னிலை வகித்தார். பள்ளி ஆசிரியை மா.கல்பனா வரவேற்றார். இனிப்புகள் வழங்கப்பட்டது.
ஓம் சக்தி பீடம் மங்கையின் மகிமை டிரஸ்ட் நிர்வாகி ஆர்.மாதவன் இலவச அன்னதானத்தை துவக்கி
வைத்தார். இவ்விழாவில் சென்னை அட்வகேம் நாகராஜன் சென்னை பத்திரிக்கையாளர் ஹர்ஷர்ராஜ்ஷா
உட்பட பலர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர் முடிவில் ஆசிரியை பாத்திமா நன்றி கூறினார்.
No comments