Disqus Shortname

பள்ளி மற்றும் கல்லூரிகளில் அப்துல்கலாமிற்கு முதலாமாண்டு நினைவஞ்சலி

உத்திரமேரூர் ஜீலை 27

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மீனாட்சி அம்மாள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் முன்னாள் குடியரசுத் தலைவர் .பி.ஜெ.அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. உத்திரமேரூர் மீனாட்சி அம்மாள் தொழிற்நுட்ப கல்லூரியில் முதல்வர் கவிராஜன் தலைமையில் நிர்வாக அலுவலர் வாசு, ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் முன்னிலையில் கல்லூரி வளாகத்தில் மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் .பி.ஜெ.அப்துல்கலாம் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினர். இதேப்போல் மீனாட்சி அம்மாள் மெட்ரிக் பள்ளியில் முதல்வர் சேகர் தலைமையிலும், ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் முதல்வர் மலர்விழி தலைமையிலும் மீனாட்சி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ராஜாமணி தலைமையிலும், குளோபல் பள்ளியில் முதல்வர் சாந்தி தலைமையிலும் மாணவ-மாணவியர்களுடன் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் கல்லூரி மற்றும் பள்ளி வளாகத்தில் .பி.ஜெ.அப்துல்கலாமின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினர். 

No comments