Disqus Shortname

தண்டரை மானாம்பதி கண்டிகை அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்

காஞ்சிபுரம் ஜீலை 08
காஞ்சிபுரம் மேற்கு உத்திரமேரூர் மேற்கு ஒன்றியம் அ.தி.மு.க. செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் தண்டரை கூட்ரோடு மானாம்பதி கண்டிகையில் நடைப்பெற்றது. ஒன்றிய கழக அவைத்தலைவர் ஏ.ராஜாமணி தலைமை தாங்கினார். காஞ்சி மேற்கு மாவட்டம் கழக செயலாளர் வாலாஜபாத் பா.கணேசன், மாநில அமைப்புச் செயலர் மைதிலி திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனர். மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வி.ஆர்.அண்ணாமலை வரவேற்றார். நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.கவினர் வெற்றி பெற கழக நிர்வாகிகள் தொண்டர்கள் தொடர்ந்து பாடுபட்டு கழக முதல்வர் ஜெயலலிதா விடம் வெற்றி பெற்ற செய்தியை தர வேண்டும் என்று பேசினார். இக்கூட்டத்தில் ஸ்ரீபெருமந்தூர் முன்னாள் எம்.எல்.ஏ இரா.பெருமாள், ஒன்றிய குழுத்தலைவர் இரா.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர், ரேவதி ராஜேந்திரன், பொ.சசிக்குமார், பி.வில்வபதி உட்பட பலர் பங்கேற்றனர். ஊராட்சி கழக செயலாளர் லூசியா ஜேம்ஸ் நன்றி கூறினார்.

No comments