Disqus Shortname

உத்திரமேரூர் ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்

உத்திரமேரூர்அக்,31:
 உத்திரமேரூர் ஒன்றிய திமுக நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் நாதன் தலைமையில் உத்திரமேரூரில் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் சுந்தர் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘பால் விலை, மின் கட்டணம் போன்றவற்றை தமிழக உயர்த்தி மக்களை நெருக்கடியில் தள்ளியிருக்கிறது.மக்கள் விரோத தமிழக அரசை கண்டித்து காஞ்சிபுரத்தில் 3ம் தேதி நடக்க உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்‘ என்றார்.

கூட்டத்தில், புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். தமிழக அரசின் மக்கள் விரோத செயல்களான பால், மின் விலை உயர்வை பொது மக்களுக்கு எடுத்து கூற வேண்டும். காஞ்சிபுரம் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் ஞானசேகரன், பேரூர் செயலாளர் பாரிவள்ளல், கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர். ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மணி நன்றி கூறினார்.

No comments