Disqus Shortname

பால் விலை, மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

உத்திரமேரூர் நவம்பர் 01:
பால் விலை, மின் கட்டண உயர்வை கண்டித்து உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். உத்திரமேரூர் வட்டக்குழு உறுப்பினர் ஜெயந்தி தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் பெருமாள், சோழன் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் மாவட்ட குழு உறுப்பினர் சிவக்குமார், உத்திரமேரூர் வட்ட செயலாளர் பாஸ்கரன் உரையாற்றினர். அப்போது, ‘தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு பால் விலை, மின்சார கட்டணம், பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. மீண்டும் பால் மற்றும் மின் கட்டணத்தை உயர்த்தி அடித்தட்டு மக்களை நசுக்கும் வேலையை செய்து வருகிறது‘ என்றனர். முடிவில் தர்மராஜ் நன்றி கூறினார்.

No comments