Disqus Shortname

உத்திரமேரூரில் வருவாய் திட்ட முகாம்: 10 மனுக்களுக்கு தீர்வு

உத்திரமேரூர் அக்,31
 உத்திரமேரூரில் வருவாய் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. உத்திரமேரூர் தாசில்தார் ரவி வரவேற்றார். பேரூராட்சி செயல் அலுவலர் கமல்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாமலை, பிரகாஷ் பாபு முன்னிலை வகித்தனர். உத்திரமேரூர் எம்எல்ஏ வாலாஜாபாத் கணேசன் கலந்து கொண்டார்.முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை பெயர் நீக்கல், சேர்த்தல், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்று தொடர்பாக 74 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 10 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 14 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 50 மனுக்கள் நிலுவையில் உள்ளது. பொதுமக்கள், விஏஓக்கள், வருவாய் திட்ட அலுவலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments