இந்திரா காந்தி 97-பிறந்த நாள் விழா
உத்திரமேரூர் நவ,20
உத்திரமேரூர் அடுத்த
சாலவாக்த்தில் நேற்று முன்னாள் பாரதபிரதமர் இந்திராகாந்தி 97-வது பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது.
மதூர் தியாகி லிங்கேசன் தலைமை தாங்கினார். சித்தனக்காவூர் தேவராஜன், சிறுபினாயூர் தாமோதரன்,
வட்டார தலைவர் துரைராஜ் முன்னிலை வகித்தனர். அகில இந்திய அன்னை இந்திரா பேரவை மாநில
தலைவர் எம்.உசேன் இந்திராகாந்தி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் மாணவ-மாணவியர்களுக்கு நேட்டு புத்தகங்கள்
வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அரும்புலியூர்சுந்தரம், சி.இராமசாமி, நாராயணசாமி, மற்றும்
பலர் பங்கேற்றனர் முடிவில் அன்புராஜ் நன்றி கூறினார்.
No comments