Disqus Shortname

களியப்பேட்டை கிராமத்தில் அம்மா திட்ட முகாம்

உத்திரமேரூர் நவ,21

உத்திரமேரூர் அடுத்த களியப்பேட்டை கிராமத்தில் நேற்று அம்மா திட்ட முகாம் நடைப்பெற்றது. முகாமில் உத்திரமேரூர் தனி வட்டாட்சியர் ரமேஷ் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் காத்தவராயன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் கோவிந்தராஜ் அனைவரையும் வரவேற்றார். முகாமில் 114 மனுக்கள் கிராம மக்களிடம் இருந்து பெறப்பட்டது. அதில் 23 மனுக்கள் உடனடி தீர்வு காணப்பட்டது, 19 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 72 மனுக்கள் நிலுவையில் உள்ளது. மேலும் நிகழ்ச்சியில் 3 பயனாளிக்கு ரூ.26 ஆயிரம் திருமண உதவித்தொகையும், 4 பயனாளிக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் கெங்கன், வார்டு உறுப்பினர் மோகன், கிளை செயலாளர் புருஷேத்தமன், சம்பத் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் முனியாண்டி நன்றி கூறினார்.

No comments