Disqus Shortname

புலியூரில் ரூ.1.50 லட்சத்தில் ஆடுகள் வழங்கும் விழா

உத்திரமேரூர் நவ,21
உத்திரமேரூர் அடுத்த புலியூர் கிராமத்தில் நேற்று தமிழக அரசின் வெள்ளாடுகள், வழங்கும் விழா நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் புலியூர் ஊராட்சி மன்றத்தலைவர் பழனி தலைமை தாங்கினார். ஒன்றியகுழு தலைவர் கமலக்கண்ணன், துணைத்தலைவர் ரவிசங்கர் முன்னிலை வகித்தனர். உத்தரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன். கலந்துகொண்டு 15 பயனாளிகளுக்கு ரூ.1லட்சத்து 50ஆயிரம் மதிப்பில் வெள்ளாடுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் ஒன்றிய செயலாளர்கள் அண்ணாமலை, பிரகாஷ்பாபு, ஜெயவிஷ்ணு, பேரூராட்சி துணைத்தலைவர் இ.தயாளன், தொகுதி செயலர் கே.ஆர்.தர்மன், ஒன்றியக்கு உறுப்பினர்கள் தங்க.பஞ்சாட்சரம், வாலாஜாபாத் சேர்மென் என்.எம்.வரதராஜிலு உட்பட பலர் பங்கேற்றனர். பொ.சசிக்குமார் நன்றி கூறினார்.

No comments