Disqus Shortname

உத்திரமேரூரில் தேசிய குழந்தைகள் உரிமை தினவிழா

உத்திரமேரூர் நவ,21
உத்திரமேரூர் அடுத்த காவனூர்புதுச்சேரியில் கிராமத்தில் குழந்தை
உரிமைக்கான தோழமைக் கூட்டமைப்பு மற்றும் சர்வோ டிரஸ்டும் இணைந்து தேசிய குழந்தைகள் உரிமை தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் சர்வோ டிரஸ்ட் இயக்குனர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். காவனூர் புதுச்சேரி கனரா வங்கி கிளை மேலாளர் ஸ்ரீகாந்த்காட்டுலா முன்னிலை வகித்தார். சர்வோ டிரஸ்ட் பொருளாளர் நாராயணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். குழந்தை உரிமைக்கான தோழமைக் கூட்டமைப்பு இயக்குனர் தேவன்பு வழிகாட்டுதலின் பேரில் நிகழ்ச்சி துவக்கப்பட்டது. நிகழ்ச்சியில் குழந்தைகளின் உரிமைகள், குழந்தைகளுக்கான கட்டாய கல்வி, குழந்தைகளுக்கான அரசின் நல திட்டங்கள், குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தை தொழிலாளர்கள் அகற்றம், குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் முக்கிய பங்கு போன்றவற்றைப் பற்றி விளக்கிக்பேசப்பட்டது. நிகழ்ச்சியின் போது மாணவ-மாணவியர்களுக்கிடையோ பேச்சு, கட்டுரை, பாட்டு, கவிதை, ஒவியம், நடனம் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் கனரா வங்கி துணை மேலாளர் பிரசாந்த் திருப்புலிவனம் கிளை கனரா வங்கி மேலாளர் சாகர், ஸ்டெல்லா, பொற்கொடி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த மாணவ-மாணவியர்கள் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் சர்வோ டிரஸ்ட் உறுப்பினர் மனோகரன் நன்றி கூறினார்.

No comments