Disqus Shortname

2 சவரன் நகை திருடிய இருவர் கைது

உத்திரமேரூர் நவ,21
உத்திரமேரூர் அடுத்த குண்ணவாக்கம் கிராமத்தில் வசிப்பவர் விவசாயி
கோவிந்தசாமி (48) இவரது மனைவி சுனிதா. இவர்கள் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் தனது வீட்டை பூட்டி வீட்டு வயல்வெளிக்கு சென்று பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பினர். அப்போது பூட்டியிருந்த வீடு
உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று
பார்த்ததில் பிரேவில் இருந்த 2 சவரன் நகை திருடு போனது தெரிய வந்தது.
உடனே உத்திரமேரூர் காவல் நிலையத்தில் கோவிந்தசாமி புகாரளித்தார். இது
தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில் துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் மேற்பார்வையில் உத்திரமேரூர் ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான போலிசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கட்டியாம்பந்தல் கூட்டுரோடில் சந்தேகத்தின் பேரில் இருவரை விசாரித்ததில் சென்னை சேலையூரை சேர்ந்த மோகன் என்கிற சாகயராஜ் (38) மற்றும் சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த சிவா (29) என்றும் இவர்கள், விவசாயி கோவிந்தசாமி வீட்டில் திருடியது தெரியவந்தது. உடனே காவல்துறையினர் அவர்களை கைது செய்து உத்திரமேரூர் கோர்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

No comments