Disqus Shortname

சித்தப்பாவை கொன்ற அண்ணன் மகன் கைது

உத்தரமேரூர் ஏப்ரல்,02:
 உத்திரமேரூர் அடுத்த கருவேப்பம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (70). இவரது  அண்ணன் அம்மாவசை மகன் பொன்னுவேல் (32). இவர்களுக்குள் கடந்த சில ஆண்டுகளாக நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை இவர்களுக்குள் மீண்டும் நிலம் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த பொன்னுவேல், அங்கிருந்த உருட்டுகட்டையை எடுத்து, சந்திரனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சந்திரன் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். உடனே பொன்னுவேல், அங்கிருந்து தப்பிவிட்டார். தகவலறிந்து உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.  மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய பொன்னுவேலுவை தேடிவருகின்றனர்.

உத்தரமேரூர் ஏப்ரல்,02
உத்தரமேரூர் அடுத்த கருவேப்பம்பூண்டியில் சந்திரன் கொலை வழக்கில் தேடபப்பட்டுவந்த அண்ணன் மகன் பொன்னுவேல் செங்கல்பட்டு பைபாசில் நிற்பதாக உத்தரமேரூர் போலீசார்க்கு தகவல் கிடைத்ததின் பேரில் ஆய்வாளர் குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று தப்பவிருந்த குற்றவாளி பொன்னுவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

No comments