Disqus Shortname

உத்தரமேரூர் அடுத்த புலியூர் கிராமத்தில் வாக்களிக்கும் இயந்திரம் பழுதடைந்ததால் வாக்காளர்கள் தவிப்பு.

உத்தரமேரூர் ஏப் 24
உத்தரமேரூர் அடுத்த புலியூர் கிராமத்தில் வியாழக்கிழமையன்று வாக்களிக்கும் இயந்திரம் பழுதடைந்ததால் வாக்காளர்கள் அவதியுற்றனர். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புலியூர், ஜே.பி.நகர், காரியமங்கலம், தளவராம்பூண்டி ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 1047 வாக்காளர் வாக்களிக்கும் இந்த வாக்கு சாவடியில் கொளுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் வாக்களிக்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது நண்பகல் 12 மணியளவில் வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென பழுதாகியது இதுகுறித்து உடனே தேர்தல் அலுவலருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இத்தகவலின் பேரில் புது இயந்திரம் வரவழைக்கப்பட்டு 12.15 வாக்குப்பதிவு துவங்கியது, துவங்கிய சிறிது நேரத்தில் மிண்டும் வரவழைக்கப்பட்ட புதிய வாக்குப்பதிவு இயந்திரமும் பழுதாகியது இதனால் வாக்குச் சாவடி மைய அலுவலர்களும் செய்வதறியாது திகைத்தனர் மீண்டும் பழுதாகிய இயந்திரத்தை மாற்றி வேறுபுது இயந்திரம் வரவழைக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் சுமார் 1 1/4 மணி நேரம் வாக்கு பதிவு பாதிக்கப்பட்டது. மாலை  6.00 மணிக்குமேல் வரும் வாக்காளர்களுக்கு கூடுதலாக அரை மணிநேரம் ஒதுக்கப்படும் என்று தேர்தல் அலுவலர் கூறினார்.

No comments