Disqus Shortname

புனித வெள்ளி சிலுவை வழிபாடு

உத்தரமேரூர் ஏப்,19

 உத்தரமேரூர் அடுத்த மானாம்பதி கண்டிகை கிராமத்தில் உள்ள காணிக்கை அன்னை ஆலயத்தில் புனிதவெள்ளி வழிபாடு நேற்று நடைபெற்றது. ஆலயத்தின் பங்கு தந்தை காணிக்கைராஜ் தலைமையில் பொது மக்கள் முன்னிலையில் ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வினை நினைவூட்டும் வகையில் புனிதவெள்ளி சிலுவைவழிபாடு முக்கிய தெரு வீதிகளில் வழியே ஊர்வலமாக வந்து புனிதவெள்ளி தினத்தை கொண்டாடினார்கள். இவ்விழாவில் பொது மக்களும் கிருஸ்துவர்களும் புனித பாடல்கள் பாடி வழிபாடு­­கள் நடத்தினார்கள். இதில் ஏராளமான கிருஸ்துவ பொது மக்கள் கலந்துகொண்டனர்.

No comments