Disqus Shortname

இளம்பெண் தற்கொலை மாமனார், மாமியார் கைது

உத்திரமேரூர் 6 ஏப்ரல், 2014: 

குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக, அவரது மாமனார், மாமியாரை, போலீசார் கைது செய்தனர்.சாலவாக்கம் அடுத்த, மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமு, 24. இவரது மனைவி தமிழ்ச்செல்வி, 19. இவர்களுக்கு, 2 ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது. தற்போது, ஒன்றரை வயதில் இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது.ராமு, தினமும் மது அருந்திவிட்டு வந்து, தமிழ்ச்செல்வியுடன் சண்டை போடுவாராம்.மேலும், தமிழ்ச்செல்வியுடன், ராமுவின் தாய், தந்தை ஆகியோரும், அடிக்கடி பிரச்னை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை, தமிழ்ச்செல்வி, வீட்டுக்குள் துாக்கில் தொங்கியதை அவரது உறவினர்கள் கண்டனர்.
உடனடியாக தமிழ்ச்செல்வியை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
தமிழ்ச்செல்வி மரணத்திற்கு காரணமான, அவரது மாமனார், மாமியாரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, அவரது தந்தை ஜெயபாண்டியன் மற்றும் அவரது உறவினர்கள், நேற்று, மருத்துவமனைக்கு எதிரே சாலையில் அமர்ந்து, மறியல் போராட்டம் செய்தனர்.அங்கு வந்த செங்கல்பட்டு போலீசார், மறியிலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிகை எடுப்பதாக, போலீசார் உறுதி அளித்தனர். அதன் பேரில், உறவினர்கள் கலைந்து சென்றனர்.இதனிடையே, தமிழ்ச்செல்வி மரணம் குறித்து, சாலவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தமிழ்ச்செல்வியின் மாமனார் அர்ச்சுனன், மாமியார் மாரியம்மாள் ஆகியோரை கைது செய்தனர்.

No comments