Disqus Shortname

முப்பெரும் விழா

உத்தரமேரூர் ஏப்,17
உத்தரமேரூர் பாலர்நேசன் நடுநிலைப்பள்ளி 118-வது ஆண்டு விழா
தலைமையாசிரியர் அறை கட்டிட திறப்பு விழா மற்றும்  பணிநிறைவு பாராட்டுவிழா என முப்பெரும் விழா பள்ளி விளையாட்டு திடலில்
நடைப்பெற்றது. மாவட்ட குற்றவியல் நடுவர் நீதி மன்ற நீதிபதி ஜெய்சங்கர் தலைமை தாங்கி பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவியருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். பட்டதாரி அறிவியல் ஆசிரியர் டி.சந்திரன் வரவேற்றார். பள்ளித்தலைமை ஆசிரியைபி.கிறிஸ்டினாள்ஜெபமணி ஆண்டறிக்கை வாசித்தார்.  11-வது வார்டு உறுப்பினர் தேவிஆனந்தன், பி.டி..தலைவர் கே.ஜம்ரூத்பி, முன்னிலை வகித்தனர்.   நீதிமொழிகேஸ் ஏஜென்சீஸ் உரிமையாளர் டி.தமிழ்செல்வம் விளையாட்டு போட்டியில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார். ஓய்வு பெறும் தொழிற்கல்வி ஆசிரியர் .அருளானந்தத்தை பாராட்டி உதவி தொடக்கக்கல்வி அலுவலர் இ.பச்சையப்பன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் லட்சுமி, ஓய்வு நாள் பாடசாலை ஆசிரியை .லில்லிமேரி புஷ்பராஜ் உட்பட பலர் வாழ்த்தி பேசினர். ஆசிரியர் அருளானந்தம் சேவையை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். பள்ளி நிர்வாகி .புஷ்பராஜ் தலைமை ஆசிரியர் அறை கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.  பட்டதாரி ஆசிரியை பி..அற்புதமேரி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆலோசகர் பி.மகேந்திரன் சிறப்பாக செய்திருந்தார். இடைநிலை ஆசிரியர்கள்ஜி.பாலு, சி.சுமதி நன்றி தெரிவித்தனர்.

No comments