Disqus Shortname

உத்தரமேரூர் ஏரியில் சடலம் வாலிபர் எரித்து கொலை போலீஸ் தீவிர விசாரணை

உத்தரமேரூர் ஏப்ரல், 28
 உத்தரமேரூர் ஏரியில் நிர்வாண நிலையில் வாலிபர் எரித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். பெண் தொடர்பு காரணமாக இந்த சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.உத்தரமேரூர் வேடபாளையம் கிராமத்தில் வைரமேக தடாகம் ஏரி உள்ளது. இன்று(ஏப்ரல், 28) காலையில் அப்பகுதி மக்கள் இந்த ஏரி வழியாக நடந்து சென்றனர். அப்போது 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனே உத்தரமேரூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.சடலம் கிடந்த இடத்தின் அருகில் ஒரு பெட்ரோல் கேன் கிடந்தது. உடல் நிர்வாண நிலையில் எரிக்கப்பட்டிருந்தது.

சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. பின்னர் வழக்கு பதிந்து முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா அல்லது பெண் விவகாரம் தொடர்பாக யாராவது எரித்து கொன்றார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.கடந்த ஆண்டு இதே ஏரியில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சிறுமி, ஒரு சிறுவன் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். மேலும், அதே ஆண்டில் விச்சூர் ஏரியில் திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. உத்தரமேரூர் பகுதியில் நடந்து வரும் இதுபோன்ற சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

No comments