Disqus Shortname

உத்­தி­ர­மேரூரில் மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா வாக்கு சேகரிப்பு

உத்தரமேரூர் ஏப்,17:
 காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா உத்தர மேரூரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்அப்போது அவர் பேசியதாவது:உத்தரமேரூர் ஏரிக்கு வரும் நீர் வரத்து கால்வாயில் சீராக நீர் வராததால் ஏரி வறண்டு போயுள்ளது. எனவே ஏரிக்கு நீர் வரத்து வரும்படி செய்வேன். பாலாற்றிலும் செய்யாற்றிலும் தடுப்பணைகள் கட்டுவேன். உத்தரமேரூருக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்களை உடனடியாக கொண்டு வருவேன். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக வேட்பாளர் மல்லை சத்யா வருகையின்போது கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்தும் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். பிரசாரத்தின்போது தேமுதிக, பாமக கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.

No comments