Disqus Shortname

மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் தற்கொலை

உத்திரமேரூர்ஏப்ரல், 30 : உத்திரமேரூர் ஏரியில், எரிந்த நிலையில் இறந்து கிடந்தவர், யாரென அடையாளம் காணப்பட்டுள்ளது. மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. உத்திரமேரூர் ஏரி பகுதியில், எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலம் ஒன்றினை நேற்று முன்தினம் உத்திரமேரூர் போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். இதில், இறந்துபோன நபர், உத்திரமேரூர் அடுத்த வேடபாளையம், பஜனைக்கோவில் தெருவை சேர்ந்த லோகநாதன் என்பவரின் மகன் ராஜ்குமார், 28, என, தெரிய வந்தது. மனநிலை பாதிக்கப்பட்ட ராஜ்குமார், அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரது பாட்டியிடம் நடத்திய விசாரணையில், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என, போலீசார் கருதுகின்றனர். இது குறித்து, உத்திரமேரூர் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


நன்றி தினமலர் 
Click Here

No comments