Disqus Shortname

உத்திரமேரூரில் மணிலா உற்பத்தி அதிகரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

உத்திரமேரூர்
உத்திரமேரூரில் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனம் சார்பில் மணிலா
உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
நேற்று உத்திரமேரூரில் நடந்தது. கூட்டத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவன
தலைவர் சோழனூர் மா.ஏழுமலை தலைமை தாங்கினார். பயிற்சிக்
கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் வணிகத்துறை இயக்குனர்
முருகன் வேளாண் ஆர்வலர் கிருத்திகா ஆகியோர் கலந்து கொண்டு
விவசாயிகளுக்கு மண் பரிசோதனை செய்து அதற்கான சான்று
அளிக்கப்பட்டது. மேலும் மண் வளத்திற்கு ஏற்றார் போது விதைகளை
எவ்வாறு பயிரிடுவது, பயிர்கள் விளைச்சல் அதிகரிக்க செய்ய வேண்டிய
வழி முறைகள் உள்ளிட்டவைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
அளிக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உத்திரமேரூர்
உழவர் உற்பத்தியாளர் நிறுவன விவசாயிகள் உட்பட பலர் கலந்து
கொண்டனர்.

No comments