Disqus Shortname

உத்திரமேரூரில் செல்போன் கடை உடைத்து ரூ.1.5 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் 50 ஆயிரம் பணம் கொள்ளை

உத்திரமேரூர்;
உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட சன்னதி தெருவில் செல்போன் கடை நடத்திவருபவர் கோபி. இவர் புதிய செல்போன்கள், பழுதுபாத்தல் மற்றும் ரிஜார்ஜ் செய்துவருகின்றனர். வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு செல்போன் விற்பனைமற்றும் ரிஜார்ஜ் கலெக்ஷன் பணம் ரூ.50 ஆயிரம் பணத்தினை கடையில்வைத்துவிட்டு 10 மணியளவில் கடையினை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்றுகாலையில் கடையினை திறக்க வந்த போது கடை பாதியளவு திறந்திருப்புதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த ரூ1.5லட்சம் மதிப்பிலான 15 புதிய செல்போன்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம்திருடுபோனது தெரியவந்தது. இதையடுத்து உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல்
தெரிவித்தனர். தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments