Disqus Shortname

உத்திரமேரூர் அருகே கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை

உத்திரமேரூர்
உத்திரமேரூர் அடுத்த தோட்டநாவல் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் 36
விவசாயி, இவரது மனைவி சௌந்தர்யா இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன்
உள்ளனர். பரமசிவம் விவசாயம் செய்வதற்காக பல்வேறு நிறுவனங்களில்
ரூ,2 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில்
நீர்இன்றி விவசாயத்தில் பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கடன்
கொடுத்த நிறுவனங்கள் அடிக்கடி பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு
செய்திருந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் கடன் கொடுத்த
நிறுவனத்தின் ஊழியர்கள் பரமசிவம் வீட்டில் வந்து கடுமையான
வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதனால் மனம் உடைந்த பரமசிவம்
வெளியில் போய் வருவதாகக் கூறிவிட்டு பின்னர் வீட்டிற்கு வந்து
படுத்துவிட்டார். சாப்பிடுவதற்காக மனைவி சௌந்தர்யா எழுப்ப சென்ற
போது பரமசிவம் வாயில் நுரை வந்த நிலையில் இறந்துகிடந்தார்.
அதிர்ச்சியடைந்த சௌந்தர்யா கூச்சலிட்டார் பின்னர் அக்கம்பக்கத்தினர்
உத்திரமேரூர் போலீசாருக்கு புகார் அளித்தனர். புகாரின் பேரில் உத்திரமேரூர்
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments