Disqus Shortname

சாத்தனஞ்சேரி கிராமத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் உணவுக் கூடம் அடிக்கல் நாட்டு விழா

உத்திரமேரூர்
உத்திரமேரூர் அடுத்த சாத்தனஞ்சேரி கிராமத்தில் அண்மையில் திமுக
சார்பில் குறைகேட்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கிராம மக்கள்
பயன்பெற்று வரும் சமுதாயக் கூடத்திற்கு உணவக கூடம் இல்லாததால்
விசேஷநாட்களில் கிராம மக்கள் பெரிதும் சிரமப்படுவதாகவும் உணவகக்
கூடம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையின்
பேரில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ தனது
சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் ஒதுக்கப்பட்டு
சமுதாயக்கூடம் அருகே உணவுக் கூடம் அமைக்க உத்தரவிட்டார்.
அதன்அடிப்படையில் உணவகக் கூடம் அடிக்கல் நாட்டு விழா நேற்று
சாத்தனஞ்சேரி கிராமத்தில் நடந்தது. விழாவில் சாலவாக்கம் ஒன்றிய
செயலாளர் டி.குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர்
நலத்துறை அமைப்பாளர் துரைவேல், நிர்வாகிகள் தசரதன், எட்டியப்பன்,
அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் தெற்கு
மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ கலந்து கொண்டு உணவுக் கூட
கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்து சிறப்புரையாற்றினார். பின்னர் அங்கு
கிராம மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கழக
நிர்வாகிகள் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments