உத்திரமேரூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் கஜா புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 60 மூட்டை அரிசி சிப்பம் வழங்கப்பட்டது
உத்திரமேரூர்
உத்திரமேரூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் கஜா புயல் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண உதவியாக வியாபாரிகள் அனைவரும்
சேர்ந்து 60 மூட்டை அரிசி சிப்பத்தினை தயார் செய்து உணவு பாதுகாப்பு அலுவலர்
கார்மேகம் மூலமாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தனர்.
நிகழ்ச்சியில் உத்திரமேரூர் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் ரமேஷ்
தலைமை தாங்கினார். பொருளாளர் விவேக், கரிகாலன், டேவிட் ஆகியோர்
முன்னிலை வகித்தனர். உணவு பாதுகாப்பு அலுவலர் கார்மேகம் நிவாரணப்
பொருட்களை பெற்றுக் கொண்டார். நிகழ்வின் போது உத்திரமேரூர் இன்ஸ்பெக்டர்
அமல்ராஜ் உட்பட வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
உத்திரமேரூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் கஜா புயல் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண உதவியாக வியாபாரிகள் அனைவரும்
சேர்ந்து 60 மூட்டை அரிசி சிப்பத்தினை தயார் செய்து உணவு பாதுகாப்பு அலுவலர்
கார்மேகம் மூலமாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தனர்.
நிகழ்ச்சியில் உத்திரமேரூர் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் ரமேஷ்
தலைமை தாங்கினார். பொருளாளர் விவேக், கரிகாலன், டேவிட் ஆகியோர்
முன்னிலை வகித்தனர். உணவு பாதுகாப்பு அலுவலர் கார்மேகம் நிவாரணப்
பொருட்களை பெற்றுக் கொண்டார். நிகழ்வின் போது உத்திரமேரூர் இன்ஸ்பெக்டர்
அமல்ராஜ் உட்பட வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments