Disqus Shortname

உத்திரமேரூரில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்பாட்டம்

உத்திரமேரூர்
உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு
மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர்
சி.எல்.ராணி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சௌபாக்கியம்,
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் சுந்தரவடிவேல், கன்னியப்பன்,
தாமஸ்இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில்
குறைந்தபட்ச ஓய்வூதியம் 7850- ஐ வழங்கிட வேண்டும், அனைத்து அரசு
ஒய்வூதியருக்கு உள்ளது போல் குடும்ப ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்,
அகவிலைப்படி, மருத்துவ காப்பீடு தொகையாக ரூ.25 ஆயிரம் வழங்கிடு,
மருத்துவபடி, பொங்கல்படியாக ரூ.500 வழங்கிடு, மூத்த குடிமக்கள்
அனைவருக்கும் இலவச பேருந்து பாஸ் வழங்க வேண்டும் என்பன
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்தும்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு சத்துணவு மற்றும்
அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினருடன் தமிழ்நாடு அரசு ஊழியர்கள்
சங்கத்தினரும் இணைத்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

No comments