Disqus Shortname

கொளுத்தும் வெய்யிலில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

 உத்திரமேரூர் மே.03

 உத்திரமேரூர் தொகுதிகுட்பட்ட நெல்லிமேடு, புலிபாக்கம், ஒழையூர்.‘,
கைதண்டலம், சேந்தாங்குளம், இரட்டைமங்களம், தோட்டநாவல், வளத்தோடு,ஆலஞ்சேரி, குண்ணவாக்கம், வாடாதவூர், சின்னாலாம்பாடி, எடமச்சி,
பொற்பந்தல், தண்டரை, எஸ்.மாம்பாக்கம், ஆலபாக்கம், உள்ளிட்ட 40 திற்கும்
மேற்பட்ட கிராமங்களில் உத்திரமேரூர் சட்ட மன்ற தொகுதி திமுக வேட்பாளர்
க.சுந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இவரை கிராம மக்கள்
ஆர்த்தி எடுத்து பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்று வரும் சட்ட மன்ற
தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்கு அளிப்போம் என்று உறுதியளித்தனர்.
இந்நிகழ்வின் போது ஒன்றிய செயலாளர் டி.குமார், தலைமை செயற்குழு
உறுப்பினர் நாகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை,கு.துரைவேல், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் டி.கே.கோபாலகிருஷ்ணன்,மகளிரணி நிர்வாகி ஆரியமாலா உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பொதுமக்களிடம்  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

No comments