உத்திரமேரூர் ஒன்றியத்தில் 30 கிராமங்களில் அதிமுக வேட்பாளர் வாலாஜாபாத் பா.கணேசனுக்கு உற்சாக வரவேற்பு
காஞ்சிபுரம்
மாவட்டம் உத்திரமேரூர் மேற்கு ஒன்றியம் கருவேப்பம்பூண்டி, ஒழுகரை, சிலாம்பாக்கம், களியாம்பூண்டி,
அனுமந்தண்டலம், இளநகர், பெருநகர் ஆகிய 30த்திற்கும்
மேற்பட்ட கிராமங்களில் திங்கள்கிழமையன்று வாக்கு
சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளர் வாலாஜாபாத் பா.கணேசனுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
ஜந்து ஆண்டுகளில் தொகுதிக்கு செய்த சாதனைகளை எடுத்து கூறி கொளுத்தும் வெய்யிலிலும்
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், வழியேங்கும்
பொதுமக்கள்,ஆர்த்தி எடுத்து பட்டாசு வெடித்து
கொண்டாடினார்கள். இளைஞர் இருசக்கரவாகனங்களில் கட்சி கொடியினை கட்டியவாறும் நமது சின்னம்
இரட்டைஇலை உங்கள் ஓட்டு இலைக்கு போடுங்கள் என்று கோஷங்களை எழுப்பியவாறு ஏரளமனோர் சென்றனர்.
உடன் ஒன்றிய கழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, பிரகாஷ்பாபு, ஒன்றியகுழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன்,
துணைத்தலைவர் அ.ரவிசங்கர், பொ.சசிகுமார், ஒ.வி.வரதன் ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜய்குமார்,
வேலு, உட்பட பலர் உடனிருந்தனர்.
No comments