Disqus Shortname

உத்திரமேரூர் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

உத்திரமேரூர் மே.10
  உத்திரமேரூர் ஒன்றியம் கடல்மங்கலம், மருதம், திருப்புலிவனம், மருத்துவான்பாடி, பெருங்கோழி, சின்னமாங்குளம், கட்டியாம்பந்தல்,
காவனூர்புதுச்சேரி, அத்தியூர், மேல்தூளி, அகரம்தூளி, மானாம்பதி, பெருநகர்
உட்பட 50 திற்கும் மேற்பட்ட கிராமங்களில் உத்திரமேரூர் சட்ட மன்ற தொகுதி
திமுக வேட்பாளர் க.சுந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இவரை
கிராம மக்கள் ஆர்த்தி எடுத்து பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்று வரும்
சட்ட மன்ற தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்கு அளிப்போம் என்று
உறுதியளித்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
விஸ்வநாதன், உத்திரமேருர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் டி.கே.கோபாலகிருஷ்ணன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் சுப்பையயா, மாவட்ட பிரதிநிதி கோவிந்தராஜ் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களிடம்  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர், முன்னதாக நிகழ்ச்சியின் போது மருத்துவான்பாடி கிராமத்தில் மாற்று கட்சியை சேர்ந்த 63 பேர் உத்திரமேரூர் சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் க.சுந்தர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்,

No comments