Disqus Shortname

உத்திரமேரூரில் பிரசாரம் ஓய்ந்தது

உத்திரமேரூர் மே, 14

உத்திரமேரூர் தொகுதியில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. பல்வேறு
கட்சி வேட்பாளர்கள் உத்திரமேரூர் பஜார் வீதியில் தங்களது இறுதி
பிரசாரத்தை முடித்தனர். திமுக வேட்பாளர் க.சுந்தர் உத்திரமேரூர்
பேரூராட்சியில் உள்ள அனைத்து தெருக்களிலும், வீதி வீதியாக சென்று வாக்கு
சேகரிப்பில் ஈடுபட்டார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் திமுக மற்றும்
கூட்டணி கட்சி கொடிகளை இருசக்கர வாகனத்தில் பொருததியவாறு வீதிகள் தோரும் வாக்கு சேகரித்தனர். அப்போது திமுக வேட்பாளரை வீடுகள் தோரும் ஆரத்தி  எடுத்தும் தேங்காய், பூசணிக்காய் உடைத்தும் பட்டாசுகள் வெடித்தும் பொது மக்கள் வரவேற்றனர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், நகர  செயலாளர் பாரிவள்ளல். தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன், மாவட்ட விவசாய  அணி அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர்  டி.கே.கோபாலகிருஷ்ணன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் சுப்பைய்யா உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பா.ம.க, தேமுதிக, நாம் தமிழர் கட்சி
இதே போல் பா.ம.க வேட்பாளர் பொன் கெங்காதரன், தேமுதிக வேட்பாளர் இராஜேந்திரன், அதிமுக வேட்பாளர்
கணேசன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சூசைராஜ் அனைவரும் பேருந்து நிலையம்அருகில் பிரசாரத்தை முடித்தனர். வேட்பாளர்கள் தொண்டார்கள் சூழ
வந்திருந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அசம்பாவிதம்
ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

No comments