Disqus Shortname

உத்திரமேரூர் அருகே மரத்தில் பஸ் மோதி 4 பேர் படுகாயம்

உத்திரமேரூர் மே, 16 உத்திரமேரூர், : கோயம்பேட்டில் இருந்து உத்திரமேரூர் வழியாக சேத்துப்பட்டுக்கு நேற்று அதிகாலையில் அரசு பஸ் த.எண் 148 புறப்பட்டது. உத்திரமேரூரில் பயணிகளை இறக்கி விட்டு அதிகாலை 3 மணியளவில் அம்மையப்பநல்லூர் அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோர மரத்தில் மோதியது. இதில் பஸ் டிரைவர் ரமேஷ் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி நொறுங்கியது.
தகவல் அறிந்து உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்கு பதிந்து விபத்துக்குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments