Disqus Shortname

உத்திரமேரூர் பஜார் வீதி ஓட்டல் மற்றும் டீக்கடைகளில் வீட்டு உபயோக சிலீண்டர்கள் பறிமுதல்

உத்திரமேரூர்
உத்திரமேரூர் பேரூராட்சிகுட்பட்ட பஜார் வீதியில் ஓட்டல்கள், பேக்கரி
மற்றும் டீ கடைகளில் வீட்டு உபயோக சிலீண்டர்கள் பயன்படுத்துவதாக
மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு தகவல் வந்தது. தகவலின் பேரில்
மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் கமலநாதன், நாகராஜன் தலைமையில்
உத்திரமேரூர் வட்டாட்சியர் அகிலாதேவி, வட்ட வழங்கல் அலுவலர்
அண்ணாமலை ஆகியோர் உத்திரமேரூர் பேரூராட்சி பஜார் வீதியில் உள்ள
ஓட்டல்கள், டீகடைகள் என பல்வேறு கடைகளில் நேற்று திடீர் ஆய்வு
மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது பஜார் வீதியில் உள்ள 15 ஓட்டல்
மற்றும் டீக்கடைகளில் வீட்டு உபயோக சிலீண்டர்கள் பயன்படுத்தியது
தெரியவந்தது. இதையடுத்து வீட்டு உபயோக சிலீண்டர்களை பறிமுதல்
செய்து ஓட்டல் மற்றும் டீக்கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
விடுக்கப்பட்டது.

No comments