உத்திரமேரூர் கோவில் குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்
உத்திரமேரூர் ஏப், 09
உத்திரமேரூர் பிரசித்தி பெற்ற கோவில் ஸ்ரீசுந்தரவரதராஜப் பெருமாள் கோவில். இந்த கோவிலுக்கு சொந்தமாக கோவில் அருகில் குளம் ஒன்று உள்ளது.
இந்த குளத்தில் (09-04-2017) மாலை அடையாளம் தெரியாத சுமார் 38 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள் உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்-? இங்கு எப்படி வந்தார்-? இது கொலை செய்யப்பட்டாரா. அல்லது தற்கொலையா என பல்வேறு கோணங்களில்
விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர் பிரசித்தி பெற்ற கோவில் ஸ்ரீசுந்தரவரதராஜப் பெருமாள் கோவில். இந்த கோவிலுக்கு சொந்தமாக கோவில் அருகில் குளம் ஒன்று உள்ளது.
இந்த குளத்தில் (09-04-2017) மாலை அடையாளம் தெரியாத சுமார் 38 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள் உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்-? இங்கு எப்படி வந்தார்-? இது கொலை செய்யப்பட்டாரா. அல்லது தற்கொலையா என பல்வேறு கோணங்களில்
விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments