Disqus Shortname

பேரூராட்சி சார்பில் 100 சதவீதம் வரி வசூல் சாதனை

உத்திரமேரூர் ஏப், 16
 உத்திரமேரூர் பேரூராட்சி சார்பில் சொத்து வரி, தொழில் வரி, வீட்டு வரி,
கடைகளுக்கான உரிமம், வணிக வளாக வாடகை, குடிநீர் வரி போன்றவை
வசூலிக்கப்படுகின்றன. இந்த வரியினை 100 சதவீதம் வசூலிக்கப்பட்டது.
தற்போது இந்த ஆண்டும் 100 சதவீதம் வரி வசூல் என்ற நிலையை எட்ட ஜனவரி  மாதம் முதல் பேரூராட்சி  ஊழியர்கள் வீடு வீடாக சென்று வரி வசூலில்  ஈடுபட்டனர். அதன்படி மார்ச் மாத இறுதி வரை பேரூராட்சிக்கு வர வேண்டிய  அனைத்து வரி வகைகளையும் 100 சதவீதம் வசூலித்து சாதனை செய்யப்பட்டதாக  பேரூராட்சி  செயல் அலுவலர் கேசவன் தெரிவித்தார். இப்பணியில் ஈடுபட்ட  ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

No comments