Disqus Shortname

அம்பேத்கர் 127–வது பிறந்த நாள் விழா பல்வேறு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை


உத்திரமேரூர் ஏப் 14 2017
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் டாக்டர் அம்பேத்கர் 127-வது பிறந்த நாள் விழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்திய குடியரசு கட்சியினர் சார்பில் உத்திரமேரூர் வட்டாட்ச்சியர் அலுவலக வளாகத்தில் ஊர்வலகமாக துவங்கி பஜார் வீதி வழியாக தாரைதப்பட்டை முழங்க பேரணியாக வந்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் அழிசூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் கோபால், துணை செயலாளர் சித்திரை, நகரத் தலைவர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் என்.ஏ.தியாகராஜன், சட்ட மன்ற தொகுதித் தலைவர் மணிகண்டன் வரவேற்றனர், காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளர் என்.சம்பத் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொகுதி செயலாளர் தி.வ.எழிலரசு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் வின்சென்ட், சேகர், நகர செயலாளர் கவியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் அன்பழகன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். புரட்சி பாரதம் கட்சி சார்பில் மாவட்ட அமைப்பு செயலாளர் விசூர் கன்னியப்பன் தலைமையில் மாவட்ட செயலாளர் எஸ்.பி.சி.தனசேகரன் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தேமுதிக சார்பில் அழிசூர் கன்னியப்பன் தலைமையில் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார். சமுதாயத் தலைவர் அ.பி.சத்திரம் தேவராஜ் தலைமையில் பொது மக்கள் முன்னிலையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு அரசு பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் அலுவலர்கள் நல சங்கம் சார்பில் மாநில இணைச் செயலாளர் இராஜ்குமாரன் தலைமையில் வட்ட நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், ஏழுமலை முன்னிலையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மறியாதை செலுத்தப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சுரேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் குமரேசன், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments