Disqus Shortname

உத்திரமேரூர் தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு வாரம்

உத்திரமேரூர் ஏப், 15
 உத்திரமேரூர் தீயணைப்பு நிலையத்தில், பணியின்போது உயிர் நீத்த
வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும், ஏப்., 14ல் இருந்து
ஒரு வாரத்துக்கு, தீ தொண்டு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. முதல் நாளான
நேற்று, உத்திரமேரூர் தீயணைப்பு நிலைய வளாகத்தில், பணியின் போது
உயிரிழந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி
செலுத்தப்பட்டது. தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன் தலைமையில் தீயணைப்பு
வீரர்கள் அணிவகுத்து நின்று மரியாதை செலுத்தினர். நேற்று முதல்
உத்திரமேரூர் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களில் தீ தடுப்பு
விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி, பேரிடர் இன்னல் தவிர்ப்பு
செய்முறை விளக்கம் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நிகழ்ச்சியில்
தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு செய்முறை பயிற்சி அளிப்பர்.

No comments