Disqus Shortname

உத்திரமேரூரில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுகவினர் விருப்ப மனு தாக்கல்

உத்திரமேரூர் செப்.21
உத்திரமேரூர் ஒன்றியம், பேரூர், சாலவாக்கம் ஒன்றியம் கழக திமுக சார்பில்
விருப்ப மனு தாக்கல் நிகழ்ச்சி நேற்று உத்திரமேரூரில் நடந்தது.
வரவிருக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய
கவுன்சிலர், பேரூராட்சி, கவுன்சிலர்களுக்கு போட்டியிட விருப்பமுள்ள
திமுகவினர் விண்ணப்பத்தினை வழஙகினார்கள். நிகழ்ச்சியினை காஞ்சி தெற்கு  மாவட்ட செயலாளரும். உத்திரமேரூர் சட்ட மன்ற உறுப்பினருமான க.சுந்தர்  தலைமை தாங்கி நிகழ்ச்சியினை துவக்கிவைத்தார். ஒன்றிய செயலாளர்கள்  ஞானசேகரன், குமார் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். நாகன், அப்பாதுரை,  துரைவேல் ஆகியோர் கழக நிர்வாகிகளிடமிருந்து விருப்ப மனுக்களை  பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர்
மா.ஏழுமலை, பேரூர் செயலாளர் பாரிவள்ளல், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர்  சுப்பய்யா உட்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

No comments