Disqus Shortname

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்திரமேரூர் செப், 01
உத்திரமேரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தலைவர் எட்டியப்பன் தலைமை
தாங்கினார். மாவட்ட செயலாளர் நேரு, பெருளாளர் சாரங்கன், வட்ட செயலாளர்கள்  பாஸ்கரன், பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் சிறு,குறு விவசாயிகள் அனைவருக்கும் வட்டியில்லா பயிர்கடன் வழங்கிடு, 15  ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகளின் விவசாயிகளின் பயிர்கடன் களை தள்ளுபடி செய், 60 வயதான விவசாயிகள் அனைவருக்கும் மாதம் ரூ, 3000 பென்ஷன்  வழங்கிடு, பாலாற்றுப் படுகையில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணையினை
அமைத்திடு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரி உள்ளிட்ட நீர் வரத்துக்
கால்வாய்களையும் தூர் வாரி ஆழப்டுத்திடு, மாவட்டத்தில் கூடுதல் நெல்
கொள்முதல் நிலையங்களை அமைத்திடுக உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். நிகழ்ச்சியில் விவசாயசங்கத்தை சேர்ந்த
பலர் கலந்து கொண்டனர்.

No comments