ரெட்டமலை சீனுவாசன் 71 வது நினைவு நாள் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை
உத்திரமேரூர்
அருகே ரெட்டமலை சீனுவாசன் பிறந்த ஊரான கோழியாளம் கிராமத்திலுள்ள ரெட்டமலை சீனுவாசன்
நினைவு மண்டபத்தில் அவரின் 71 வது நினைவு நாளான நேற்று கோழியாளம் கிராமத்தில் பல்வேறு
அமைப்பினர் மாலையுடன் ஊர்வலமாக வந்து ரெட்டமலை சீனுவாசனின் திருஉருவச்சிலைக்கு மாலை
அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி
தெற்கு மாவட்ட செயலளாளர் சு.க.ஆதவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் கலைவடிவன்,
தேவஅருள்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர்
முறப்பாக்கம்தயாநிதி, பன்னீர்செல்வம் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். நிகழ்ச்சியில்
மண்டல செயலாளர் சூ.க.விடுதலைச் செழியன், மாநில
மகளிரணி இணை செயலாளர் தமிழினி ஆகியோர் கலந்து கொண்டு ரெட்டமலை சீனுவாசன் திருஉருவச்சிலைக்கு
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் கலைகதிரவன்,
ஒன்றிய செயலாளர் வின்சென்ட், திருமாபிரதாப், விடுதலைசெல்வன், அப்பாதுரை, உதயகுமார்,
ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார், ஈழத்தமிழன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில்
அச்சரப்பாக்கம் பேரூர் செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார். இதேப்போல் அகில இந்திய அம்பேத்கர்
மக்கள் கழகம் சார்பில் கழக மாநில நிறுவனத் தலைவர் இரா.மாமல்லன் தலைமையில் ரெட்டமலை
சீனுவாசன் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில்
ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments