Disqus Shortname

கிணற்றில் தவறி விழுந்த கன்று குட்டி

உத்திரமேரூர், செப், 17
உத்திரமேரூர் அடுத்த மருதம் கிராமத்திலிருந்து மளையாங்குளம் செல்லும்
சாலையில் புத்தளி பகுதியில் சாலையோரம் விவசாயக் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றை விவசாயி வெகு நாட்களாக முறையாக பராமரிக்கப்படாததால் கிணற்றில் சுற்று சுவர் இன்றி சிதலமடைந்தும், கிணறை சுற்றிலும் செடிகள் வளர்ந்தும்  காணப்படுகிறது. இதனால் கிணறு அருகே உள்ள விவசாய நிலத்திற்கு செல்லும் பொது மக்களும் கால்நடைகளும் பாதுகாப்பின்றி சென்று வந்தனர். மேலும் கிணறானது சாலையோரம் உள்ளதால் மலையாங்குளம், படூர், நெய்யாடுவாக்கம்
உள்ளிட்ட கிராமங்களுக்கு இருசக்கர வாகனத்தில் கிணறு அருகே செல்லும் போது பொது மக்கள் பயத்துடனே செல்கின்றர். இந்நிலையில் நேற்று விவாசாய  நிலத்திற்கு சென்று கொண்டிருந்த இளங்கன்று குட்டி ஒன்று எதிர்பாரத விதமாக  கிணற்றில் தவறி விழுந்தது. இதைகண்ட அருகிலிருந்த விவசாயிகள் அந்த கன்று  குட்டியினை கயிறு கட்டி மீட்டு சிகிச்சை அளித்தனர். இது போன்ற சம்பவங்கள்  மீண்டும் நடக்காமலிருக்க கிணற்றிற்கு சுற்று சுவர் அமைக்க சம்மந்த பட்ட  நிர்வாகத்தினர் வலியுறுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

No comments