Disqus Shortname

உத்திரமேரூர் அருகே கோர விபத்து:தாய், தந்தை, மகன் பலி


உத்திரமேரூர் 19 SEP 2016;உத்திரமேரூர் அருகே, இரு சக்கர வாகனத்தில் சென்ற போது நடந்த விபத்தில், தாய், தந்தை, மகன் மூவரும் வேன் மோதி இறந்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த நாயுடு மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், 45; சாலை சீரமைப்பு பணி செய்யும் கூலி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம்(19-09-2016) பகல், 12:30 மணிக்கு, மறைமலைநகரில் பணியை முடித்து, உடன் பணியாற்றும் மனைவி ஜெயா, 40, மற்றும் மகன் சரவணன், 22, ஆகியோருடன் ஒரே இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.



அப்போது, புக்கத்துறை - உத்திரமேரூர் சாலையில், நெல்வாய் அருகே, மறைமலைநகர் தனியார் தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றி வந்த வேனும் வெங்கடேசன் வந்த இரு சக்கர வாகனமும் மோதின. இதில், வெங்கடேசன் மற்றும் மகன் சரவணன் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தனர். படுகாயமடைந்த ஜெயாவை அப்பகுதியினர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி ஜெயாவும் உயிர் இழந்தார். வேனில் இருந்த ஓட்டுனர் உட்பட எட்டு பெண் தொழிலாளர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து, சாலவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

No comments