Disqus Shortname

உத்திரமேரூர் - காஞ்சிபுரம் இடையே கூடுதல் பேருந்து இயக்கப்படுமா?

உத்திரமேரூர் :
உத்திரமேரூரில் இருந்து காஞ்சிபுரத்திற்கு, இரவு நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனனர்.உத்திரமேரூர் - காஞ்சிபுரம் வழித் தடத்தில், மருத்துவன்பாடி, மருதம், திருப்புலிவனம், ஒழுகரை, சிலாம்பாக்கம், வெங்காரம், கருவேப்பம்பூண்டி, புலிவாய், மணல்மேடு, புத்தளி, வெங்கச்சேரி, மாகரல், ஆற்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள நுாற்றுக் கணக்கானோர் உத்திரமேரூர் வந்து அங்கிருந்து பேருந்து பிடித்து, செங்கல்பட்டு, வந்தவாசி, செய்யார், மதுராந்தகம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். உத்திரமேரூரில் இருந்து, காஞ்சிபுரத்திற்கு செல்ல இரவு, 9:10 மணிக்கு மேல் பேருந்து இல்லாத நிலை உள்ளது. இதனால், பணி முடித்து இரவு 9:00 மணிக்கு மேல் வீடு திரும்புவோர் போக்குவரத்து வசதியின்றி அவதிக்கு உள்ளாகின்றனர்.
எனவே, உத்திரமேரூரில் இருந்து காஞ்சிபுரத்திற்கு இரவு, 9:10 மணிக்கு மேல், கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments